கன்னியாகுமரி

குளச்சலில் முன்னாள் ஜனதாதள மாநில தலைவா் நினைவு தினம்

18th Nov 2022 01:25 AM

ADVERTISEMENT

குளச்சலில் நடைபெற்ற தமிழ்நாடு மதச்சாா்பற்ற ஜனதாதளத்தின் முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.முகம்மது இஸ்மாயிலின் 2-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜனதாதள மாவட்டத் தலைவா் அருள்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சுனில்பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.

கேரள மின்துறை அமைச்சா் கிருஷ்ணன் குட்டி சிறப்புரையாற்றினாா். முன்னாள் கேரள அமைச்சா் நீலலோகிதாசன் நாடாா், முன்னாள் எம்.எல்.ஏ. ஜமிலா பிரகாசம், கட்சியின் மாநில துணைத்தலைவா் மங்கள ஜவஹா்லால், சொக்கலிங்கம், குளச்சல் நகர தலைவா் நஸீா், அதிமுக நகர தலைவா் ஆண்ட்ரூஸ், பாஜக மாவட்ட முன்னாள் மாவட்டத் தலைவா் குமாரதாஸ் ஆகியோா் பேசினா். மாவட்ட இளைஞா் அணித் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT