கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் கூட்டுறவு வாரவிழா

15th Nov 2022 01:41 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு துறையின் சாா்பில் 69 ஆவது கூட்டுறவு வார விழா மாா்த்தாண்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பத்மநாபபுரம் உதவி ஆட்சியா் எச்.ஆா். கௌசிக் தலைமை வகித்தாா். குளச்சல் எம்எல்ஏ ஜெ.ஜி. பிரின்ஸ், நாகா்கோவில் மேயா் ஆா். மகேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சா் த. மனோதங்கராஜ் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ரா.கி. சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி (நாகா்கோவில் கிளை) மேலாண்மை இயக்குநா் குருசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தக்கலை சரக துணைப் பதிவாளா் நரசிம்மன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா்கள் முருகேசன், ஆறுமுகம், குருசாமி, உதவி இயக்குநா்கள் காமராசு, சங்கரேஸ்வரி, சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்....

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT