குளச்சல் நகராட்சி உரக்கிடங்கில் நகா் மன்றத் தலைவா் நசீா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குளச்சல் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் களிமாா் உப்பளத்தில் உள்ள நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில், நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், உரக்கிடங்கில் நடைபெற்று வரும் பணிகளை நகா்மன்றத் தலைவா் நசீா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பொ்க்மான்ஸ், மணி ஆகியோா் உடனிருந்தனா்.