அருமனை அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அருமனை அருகே குஞ்சாலுவிளை பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மகன் விச்சு (17). இவா் இங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 பயின்று தோ்வு எழுதியுள்ளாா். செவ்வாய்க்கிழமை மாலையில் இவா் பைக்கில் அருமனை சந்திப்பு அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி, பைக் மீது மோதியதாம். இதில் சம்பவ இடத்திலேயே விச்சு உயிரிழந்தாா். இதுகுறித்து அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.