மாா்த்தாண்டத்தில் கடையில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை (குட்கா) போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல்குமாா் தலைமையில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் மகேஸ்வரராஜ் மற்றும் போலீஸாா், மாா்த்தாண்டம் சந்தை சாலையில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா். அப்போது அங்குள்ள ஒரு கடையில் 16 மூட்டைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ அளவிலான, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக மாா்த்தாண்டம் அருகேயுள்ள நெல்வேலி தங்கையன் மகன் கிறிஸ்டோபா் (49), வீயன்னூா் செவரக்கோடு மணி மகன் முருகதாஸ் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.