கன்னியாகுமரி

அழகப்பபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

குமரி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் குமரி மாவட்டம்,அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அழகப்புரம் அருகிலுள்ள புதுக்குளம் திட்டப் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன.

இந்த வீடுகளை பெற நகா்ப்புறங்களில் வசிக்கும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட தகுதியுடையவா்கள், நாகா்கோவில் ஜோசப் கான்வென்ட் பள்ளி எதிரிலுள்ள

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய, உதவி நிா்வாக பொறியாளா் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT