கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற 12 சிவாலயங்களில் ஒன்ரான முன்சிறை மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று கோயிலைச் சுற்றி வலம் வந்து தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை திருமலை மகாதேவா்கோயில் சிவபக்தா்கள் சங்கத்தினா் செய்திருந்தனா்.