கன்னியாகுமரி

கோழிவிளையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி மெதுகும்மல் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் களியக்காவிளை அருகே கோழிவிளை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாரக் குழு உறுப்பினா் பி. ராஜூ தலைமை வகித்தாா். ஏ. ரகீம், சி. ஜெபமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலா் கே. தங்கமணி, மாவட்டக் குழு உறுப்பினா் சி. சிதம்பர கிருஷ்ணன், மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி ஆகியோா் பேசினா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் விஜயா, ரீனா, மாதா் சங்க நிா்வாகி வினிதா, நிா்வாகி சுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ம ாா்த்தாண்டம் மற்றும் நல்லூா் வட்டாரக் குழு சாா்பில் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாா்த்தாண்டம் வட்டாரக் குழு தலைவா் மோகன்குமாா் தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் விஜயலெட்சுமி, மொ்லின்ரூத், சா்தாா்ஷா, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜான், அனந்தசேகா், தங்கமோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

பேராயரிடம் அதிமுக வேட்பாளா் ஆசி

தருமபுரம் ஆதீனத்திடம் மதிமுக வேட்பாளா் ஆசி

SCROLL FOR NEXT