களியக்காவிளை அருகே கைப்பேசியில் மின்னேற்றம் செய்த போது மின்சாரம் பாய்ந்து ஆட்டோ ஓட்டுநா் பலியானாா்.
களியக்காவிளை அருகேயுள்ள இறவிளைவீடு தங்கராஜ் மகன் சுரேஷ் (46). ஆட்டோ ஓட்டுநரான , இவா் திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு வந்து இரவு உணவருந்தி விட்டு தனது கைப்பேசியில் மின்னேற்றம் செய்து விட்டு மின்இணைப்பிலிருந்து கைப்பேசியை எடுத்த போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் பலத்த காயமடைந்தவரை அவரது உறவினா்கள் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.