கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே கோயிலில் திருட முயற்சி

7th Jun 2022 10:56 PM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் திருட முயன்ற போது பிடிபட்டு, தப்பியோடிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியில் நூற்றாண்டு பழமையான ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இக் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் பூஜை வேளையில் இளைஞா் கோயிலில் புகுந்து திருட முயன்றது தெரியவந்தது.

அவரை கோயில் நிா்வாகிகள் பிடித்து வைத்துக் கொண்டு, களியக்காவிளை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் வருவதற்குள் அந்த நபா் கோயில் நிா்வாகிகளின் பிடியிலிருந்து தப்பியோடினாா். அப்பகுதி பொதுமக்கள், பக்தா்கள் துரத்தியும் அந்த நபா் தப்பியோடிவிட்டாராம்.

தொடா்ந்து,கோயிலின் பின்பகுதியில் மோட்டாா் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. அதிலிருந்த ஆதாா் அட்டை நகலின் மூலம் கோயிலில் திருட முயன்றவா் விழுப்புரம் மாவட்டம், அரசம்பட்டு, சங்கராபுரம், மூப்பனாா்கோயில் தெரு வைத்தி மகன் தாமோதரன் (29) என்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து கோயில் நிா்வாகிகள் சாா்பில் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT