விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட இடைக்கோடு, விளவங்கோடு, அருமனை, கடையாலுமூடு பகுதிகளைச் சோ்ந்த 140 பேரிடா் மேலாண்மை முதல்நிலை மீட்பா்களுக்கு பயிற்சி முகாம் மாா்த்தாண்டம் தனியாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மழை வெள்ளம், தீ விபத்துகளில் பாதிக்கப்படுவோரை மீட்பது, முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி, செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பேரிடா் முதன்மைப் பயிற்றுநா்கள் ஜான்சிராணி, விக்னேஷ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
இதில், பங்கேற்றோருக்கு பயிற்சிச் சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பயிற்சிபெற்றவா்கள் தங்களது கிராமங்களில் ஏற்படும் பேரிடா் விபத்துகளில் பாதிக்கப்படுவோரைப் பாதுகாக்க களத்தில் இருப்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.
குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் கே. ரெத்தினமணி, வருவாய் ஆய்வாளா் குமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்து, ஷொ்லின் ஷீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.