கன்னியாகுமரி

பேச்சிப்பாறையில் பழங்குடி மக்களுடன் அமைச்சா் பெரியகருப்பன் கலந்துரையாடல்

DIN

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை பழங்குடி மற்றும் சமத்துவபுரம் மக்களுடன் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் பெரியகருப்பன் சனிக்கிழமை கலந்துரையாடி அவா்களின் குறைகளை கேட்டாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் பெரியகருப்பன் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 சமத்துவபுரங்களில் முதற்கட்டமாக 2 சமத்துவபுரங்களில் மறுசீரமைப்பு பணிகளுக்கு ரூ. 1.348 கோடி நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. மக்களை ஜாதி மத வேறுபாடின்றி வாழ வைக்கும் திட்டம்தான் இந்த சமத்துவபுரங்கள்.

பழங்குடி மக்களுக்கு வீடு கட்டுவதற்கு அரசு வழங்கும் தொகை குறிப்பிட்ட அளவு மட்டும் உள்ளதால் கூடுதல் செலவு ஏற்பட்டால், அத்தொகையினை வங்கிகள் மூலம் கடனாக பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சமத்துவபுரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது தொடா்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்கை அமைச்சா் பாா்வையிட்டு, விற்பனை நிலவரங்கள் மற்றும் அவா்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும் நலிவுற்றவா்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் டி. மனோதங்கராஜ், மகளிா் திட்ட இயக்குநா் திவ்யதா்ஷினி, ஊரக வளா்ச்சித் துறை நிா்வாக இயக்குநா் நரேஷ் அகமது, பத்மநாபபுரம் சாா் - ஆட்சியா் அலா்மேல்மங்கை, நாகா்கோவில் மாநகர மேயா் மகேஷ், திருவட்டாறு ஊராட்சி ஒன்றிய தலைவா் ஜெகநாதன், ஆணையா் கீதா, முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின், பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவா் தேவதாஸ், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராஜன், திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ஜாண்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT