கன்னியாகுமரி

பட்டணம்கால்வாய் உடைப்பை சீரமைக்க கேட்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

குலசேகரம் அருகே காவல்ஸ்தலம் பகுதியில் சிற்றாறு பட்டணம்கால்வாய் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செருப்பாலூா் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டார செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். ரவி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

ஆா்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் நடராஜன், விவசாய தொழிலாளா் சங்க வட்டார செயலா் ஸ்ரீ குமாா் ஆகியோா் பேசினா்.

மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அண்ணாதுரை போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

போராட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ஜேம்ஸ், சதீஷ், உம்மன், கிருஷ்ணன் குட்டி, சிம்சன், ஜலால், மாலிக், குலசேகரம் பேரூராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினா்கள் செல்லப்பன், வேலம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

SCROLL FOR NEXT