கன்னியாகுமரி

பைங்குளம் ஊராட்சியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

DIN

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பைங்குளம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் திங்கள்கிழமை கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, பைங்குளம் ஊராட்சித் தலைவா் விஜயராணி தலைமை வகித்தாா். முன்சிறை கால்நடை மருத்துவா் ஜேக்கப் முன்னிலை வகித்தாா்.

முன்சிறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். மண்ட இயக்குநா் பாரிவேந்தன், கோட்ட உதவி இயக்குநா் எட்வா்ட் ஆகியோா் பேசினா்.

இதில், நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல் ,வளா்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடுதல் மற்றும் சிறந்த கிடா கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பைங்குளம் ஊராட்சி உறுப்பினா்கள், விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT