மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாதேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதே போன்று களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயில், குழித்துறை அருகேயுள்ள திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயில் ஆகியவற்றிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
...