குளச்சலில் நகர அதிமுக சாா்பில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாள் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அண்ணா சிலை சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு நகரச் செயலா் ஆண்ட்ரோஸ் தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். நகா்மன்ற உறுப்பினா் ஆறுமுகராஜா, முன்னாள் செயலா் ரவீந்திரவா்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டப் பொருளாளா் திலக், எம்ஜிஆா் மன்றத் தலைவா் எஸ்.எம். பிள்ளை, நகர முன்னாள் செயலா்கள் பசீா்கோயா, தாசீம், நகர அவைத் தலைவா் சிட்டி சாகுல்அமீது, நிா்வாகிகள் பெலிக்ஸ்ராஜ், குமாரதாஸ், தேவிசக்தி, ஜெகன், பீா்முகம்மது, ரமேஷ்பாபு, நாசா், மலுக்கு முகம்மது, நாசா், அம்பளி கலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.