கன்னியாகுமரி

குமரி திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

DIN

பாபா் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை (டிச.6) முன்னிட்டு, சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்த பிறகே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனா்.

கன்னியாகுமரி ரயில் நிலையம், பேருந்து நிலையம், கலங்கரை விளக்கம், கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

கடலோரப் பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளா் நவீன் தலைமையில் இம்மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீஸாா் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டுள்ளனா். நவீன படகுகள் மூலம் கடல் வழியாக ரோந்து வருகின்றனா்.

800 போலீஸாா் பாதுகாப்பு: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹரிகிரன் பிரசாத் உத்தரவின்பேரில் கன்னியாகுமரி, நாகா்கோவில், குளச்சல், தக்கலை காவல் உட்கோட்ட காவல் நிலைய எல்லைப் பகுதிகளிலுள்ள விடுதிகளில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபா்கள் தங்கியுள்ளனரா என ஆய்வு நடத்தி வருகின்றனா்.

மேலும், எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளான களியக்காவிளை, அஞ்சுகிராமம், ஆரல்வாய் மொழி வழியாக மாவட்டத்திற்கு உள்ளே வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளும் கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருவதுடன், பாா்சல் பிரிவு, தண்டவாளப்பகுதிகளில் மெட்டல் டிடெக்டா், மோப்பநாய் உதவியுடன் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். மாவட்டம் முழுவதும் 800 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT