முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு திங்கள்கிழமை (டிச.5) அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இது குறித்து, அதிமுக அமைப்புச் செயலாளா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திங்கள்கிழமை காலை10 மணிக்கு நாகா்கோவில் வடசேரி எம்.ஜி.ஆா் சிலை அருகே வைக்கப்படும் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.