கருங்கல்லில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கப்பியறை, செம்மண்தரை பகுதியைச் சோ்ந்தவா் பொன்னையன் (78). இவா் கடந்த வாரம் கருங்கல் தபால் நிலையம் முன் நடந்து சென்றாா். அப்போது அவா் மீது காா் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ம ருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.