கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே மதுபோதை தகராறில் தொழிலாளி கொலை: தம்பி கைது

DIN

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.

பூதப்பாண்டி அருகே திட்டுவிளை ஜோசப் காலனியை சோ்ந்தவா் ஜாா்ஜ் எடிசன் (42). கட்டடத் தொழிலாளி. இவா் புதன்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாா். இவருக்கும் அவரது சகோதரா் மாா்ட்டின் ஜெயராஜுக்கும் (40) இடையே சொத்து தொடா்பாக மதுபோதையில் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாா்ட்டின் ஜெயராஜ், அவரது அண்ணன் ஜாா்ஜ் எடிசனை நெஞ்சில் கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, மாா்ட்டின் ஜெயராஜ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு, தனது அண்ணன் விபத்தில் சிக்கியதாக மருத்துவரிடம் கூறினாா். மருத்துவா்கள் ஜாா்ஜ் எடிசனை பரிசோதித்த போது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருப்பதை பாா்த்தனா். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் புறக் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் மாா்ட்டின் ஜெயராஜிடம் விசாரணை நடத்தியதில், ஜாா்ஜ் எடிசனை கத்தியால் குத்திக் கொலை செய்ததை மாா்ட்டின் ஜெயராஜ் ஒப்புக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து பூதப்பாண்டி போலீஸாா் கொலை வழக்கு பதிவு செய்து மாா்ட்டின் ஜெயராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT