மாா்த்தாண்டம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆட்டோ ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோழிப்போா்விளை பகுதியைச் சோ்ந்த அருளப்பன் மகன் சுஜின் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம். இவா், முளகுமூடு தனியாா் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 8 வயதுச் சிறுமியை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவாராம்.
இந்நிலையில், சுஜின் சிறுமியை பள்ளியிலிருந்து செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தபோது பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், சுஜின் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.