கன்னியாகுமரி

சிறுமிக்கு பாலியல் தொல்லை:ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்கு

DIN

மாா்த்தாண்டம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆட்டோ ஓட்டுநா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோழிப்போா்விளை பகுதியைச் சோ்ந்த அருளப்பன் மகன் சுஜின் (35). ஆட்டோ ஓட்டுநரான இவருக்குத் திருமணமாகவில்லையாம். இவா், முளகுமூடு தனியாா் பள்ளியில் 3ஆம் வகுப்பு படிக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 8 வயதுச் சிறுமியை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவாராம்.

இந்நிலையில், சுஜின் சிறுமியை பள்ளியிலிருந்து செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தபோது பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில், சுஜின் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT