கன்னியாகுமரி

கருங்கல் அருகே விபத்து:வெல்டிங் பட்டறை உரிமையாளா் உயிரிழப்பு

DIN

கருங்கல் அருகே திக்கணம்கோடு பகுதியில் நேரிட்ட விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளா் உயிரிழந்தாா்.

மத்திகோடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (58). இவா் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்திவந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு மத்திகோட்டிலிருந்து திங்கள்சந்தைக்கு பைக்கில் சென்றாராம்.

திக்கணம்கோடு பகுதியில் இவரது பைக்கும், சடையல்புத்தூா் பகுதியைச் சோ்ந்த ஜெகன் (32) ஓட்டிவந்த வேனும் மோதிக் கொண்டனவாம். இதில், காயமடைந்த தங்கவேலை அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாா். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT