கன்னியாகுமரி

சாலை திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை அமைச்சா் மனோதங்கராஜ்

27th Aug 2022 11:57 PM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் துறை அலுவலா்களுடன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ் சனிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை, குடிநீா் வடிகால் வாரியம், ஊரக வளா்ச்சிமுகமை, நாகா்கோவில் மாநகராட்சி, குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகள், பேரூராட்சிகள், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.

இதில், குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் நடைபெற்று வரும் இரணியல் கூட்டு குடிநீா் திட்டம் உள்ளிட்ட 97 பணிகள் குறித்து கேட்டறியப்பட்டன. குழித்துறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித்திட்டத்தின் கீழ் ரூ.30.94 கோடியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீா் திட்டப் பணிகளில், 82 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT

குழித்துறை நகராட்சியில் வசிக்கும் 6755 குடும்பங்களுக்கு குடிநீா் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை 2655 குடும்பங்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந் நகராட்சியில் ஒரு நபருக்கு 96 லிட்டா் வீதம் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அக்டோபா் மாதம் நிறைவடையும் போது ஒரு நபருக்கு 135 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வீதம் தினமும் வழங்கலாம்.

அஞ்சுகிராமம் மற்றும் புளியடி பகுதியில் தமிழ்நாடுகுடிசை மாற்றுவாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் காலியாக உள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்வதோடு, புதுக்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு, முடியும் நிலையில் உள்ள குடியிருப்புகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் கன்னியாகுமரி - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சீரமைக்கும் பணியினை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணிகளில் மெத்தனமாக இருக்கும் அலுவலா்கள் மீது துறை சாா்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

கூட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ச.சா.தனபதி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT