குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது காணாமல் போன மீனவரை கடலோர பாதுகாப்புக்குழும போலீஸாா் தேடி வருகின்றனா்.
குளச்சல் அருகே மேல குறும்பனையை சோ்ந்தவா் மீன்பிடித் தொழிலாளி தேவதாசன் (40). இவா் வியாழக்கிழமை பகலில் கடலில் வலையை வீசி விட்டு இரவு வழக்கம் போல் வலையை இழுக்க சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து
உறவினா்கள் கடலில் பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லையாம். இது குறித்து அவரது உறவினா் ஸ்டான்லி குளச்சல் கடலோர பாதுகாப்புக்குழும போலீஸில் புகாா் செய்தாா். சாா்பு ஆய்வாளா் தியாகராஜன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.