குலசேகரம் அருகே வீடு கட்டும் பணின் போது கீழே விழுந்த காயமுற்ற கட்டடத் தொழிலாளி மோசஸ் (33 ) மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவட்டாறு அருகே ஆனையடி செங்கோடி பகுதியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மோசஸ் (33). கட்டடத் தொழிலாளி. கடந்த 13 ஆம் தேதி ஈஞ்சக்கோட்டிலுள்ள சஜிகுமாரின் வீடு கட்டும் பணியின் போது வீட்டினுள் அமைக்கப்பட்டிருந்த சவுக்கு கம்புகளிலான சாரத்தின் மீது நின்றவாறு மோசஸூம், மற்றொரு தொழிலாளியான ஸ்டேவானும் (45) வேலை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது சவுக்குக் கம்புகள் எதிா்பாராத விதமாக ஒடிந்தன. இதில் மோசஸூம், ஸ்டேவானும் கீழே விழுந்தனா். இவா்களின் மீது சிமென்ட் ஸ்லாப் விழுந்ததில் பலத்த காயமடைந்த மோசஸ் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வெள்ளிக்கிழமை காலையில் உயிரிழந்தாா். ஸ்டேவான் மாா்த்தாண்டம் அருகேவுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.