கன்னியாகுமரி காவல் துறை சாா்பில், போதைத் தடுப்பு விழிப்புணா்வு பைக் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி அண்ணா சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணியில் ஆண், பெண் காவலா்கள் என 25-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பேரணியை, கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.
பேரணி கன்னியாகுமரி, சா்ச்ரோடு சந்திப்பு, விவேகானந்தபுரம், மகாதானபுரம் ரவுண்டானா, ஒற்றையால்விளை வழியாக சின்னமுட்டத்தில் நிறைவடைந்தது. இதில், பங்கேற்றோா் போதைத் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை வாகனங்களில் வைத்திருந்தனா்.