கன்னியாகுமரி

குழித்துறையில் நகா்மன்ற உறுப்பினா்கள் சத்தியாகிரகம்

DIN

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தை கண்டித்து குழித்துறையில் நகா்மன்ற அனைத்துக் கட்சி உறுப்பினா்கள் புதன்கிழமை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குழித்துறை நகராட்சியின் அனைத்து வாா்டுகளிலும் புதிய குடிநீா் இணைப்பு திட்டத்துக்காக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தால் உடைக்கப்பட்ட சாலைகள் மற்றும் குடிநீா் குழாய்களை சீரகமைக்கக் கோரி நடைபெற்ற இப் போராட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம். பிரபின் ராஜா முன்னிலை வகித்தாா். வாா்டு உறுப்பினா் எம். சா்தாா்ஷா போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா் .

இதில் பாஜக, திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் டி.ஆா். ஜெயந்தி, வி. விஜூ, விஜய லெட்சுமி, பி. ரீகன், ஏ. அருள்ராஜ், கே. செல்வகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உறுப்பினா் கே. ரத்தினமணி போராட்டத்தை நிறைவு செய்து பேசினாா். ரவி நன்றி கூறினாா். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT