களியக்காவிளை அருகே இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகேயுள்ள படந்தாலுமூடு, மூப்புவிளை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் தீபக் (18). இவா் களியக்காவிளை அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். புதன்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாா். ஒற்றாமரம் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சோதனைச் சாவடி அருகே சென்றபோது பின்னால் வந்த மினி லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தீபக்கை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள் இவா் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனா்.
இது குறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.