கன்னியாகுமரி

மரியகிரியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரியில் காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

துண்டிக்கப்பட்ட மரியகிரி-தெற்றியோடு செல்லும் நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையோர சாலையைச் சீரமைக்கக் கோரி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தலைமை வகித்தாா். முன்சிறை வட்டார ஓபிசி பிரிவுத் தலைவா் ஆா். பால்ராஜ், மெதுகும்மல் கிளைத் தலைவா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் விஜய் வசந்த், ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினாா். எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ, மேற்கு மாவட்டத் தலைவா் பினுலால்சிங், மாநிலச் செயலா் எஸ். ஆஸ்கா்பிரடி ஆகியோா் பேசினா்.

மாவட்டச் செயலா்கள் துளசிதரன், டென்னிஸ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கே. லூயிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT