புதுக்கடை அருகேயுள்ள இனயம் புத்தன்துறை பகுதியில் முதியவரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இனயம் புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் ஏசுதாஸ் (69). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் (50) - ஷீபா (48) தம்பதிக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், பணம் கேட்கச் சென்ற ஏசுதாஸை பிரான்சிஸ் தம்பதி தாக்கியதாகக் கூறப்படுகிறது. புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.