கன்னியாகுமரி

குலசேகரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் 38 போ் கைது

DIN

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து குலசேகரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினா் 38 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் சந்தை சந்திப்பில் ஆா்ப்பாட்டத்திலி ஈடுபட முயன்ற இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கிருஷ்ணகுமாா், கோட்டப் பொறுப்பாளா் மிஷா சோமன், மாநில செயற்குழு உறுப்பினா் குழிச்சல் செல்லன் மற்றும் 3 பெண்கள் உள்பட 38 பேரை தக்கலை டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீஸாா் கைது செய்து, அங்குள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.

இந்நிலையில் போராட்டம் நடத்த அனுமதிக்காததைக் கண்டித்து, கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்து முன்னணியினா் மதியம் உணவை புறக்கணித்து உண்ணவிரதம் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT