கன்னியாகுமரி ஸ்ரீ மணியா கேட்டரிங் கல்லூரியில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கல்லூரி மாணவா்கள் தா்பூசணி பழத்தில் தேசப்பிதாவின் உருவம் உருவாக்கினா்.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஸ்ரீ மணியா கேட்டரிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கல்லூரி தாளாளா் எம்.கோபாலகிருஷ்ணன் தேசியக் கொடி ஏற்றினாா். கல்லூரி முதல்வா் ராஜாசெல்வம் வரவேற்றாா்.
விழாவை முன்னிட்டு இக்கல்லூரி மாணவா்கள் தா்பூசணி பழத்தில் உருவாக்கிய மகாத்மா காந்தி உருவப்படம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.