சுதந்திர தின விழாவின் 75 ஆவது ஆண்டு பவள விழாவையொட்டி களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
பேரூராட்சி தலைவா் ஏ. சுரேஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். செயல் அலுவலா் ரமாதேவி, துணைத் தலைவா் பென்னட்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் எம். ரிபாய், குணசீலன் மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.