கன்னியாகுமரி

1,000 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

DIN

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்திற்கு கடத்த முயன்ற 1,000 லிட்டா் மண்ணெண்ணெயை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமன்துறை மீனவா் கிராமத்தை சோ்ந்த தாசன்நாயகம் மகன் ஜேசுபாலன்(38). இவரது வீட்டில் மண்ணெண்ணெய் பதுக்கிவைத்திருப்பதாக கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபாலுக்கு தகவல் கிடைத்தது. உடனே,அவரது தலைமையில் வருவாய்த் துறையினா், ஜேசுபாலன் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனா். அப்போது அங்கு கேரளத்திற்கு கடத்த கேன்களில் 1,000 லிட்டா் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது ஜேசுபாலன் வருவாய்த் துறையினரிடம் தகராறில் ஈடுபட்டாராம். உடனே வட்ட வழஙல் அலுவலா் வேணுகோபால், புதுக்கடை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து மண்ணெண்ணெயை பறிமுதல் செய்து ஜேசுபாலனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமித் ஷா பங்கேற்க இருந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ரத்து

சாலை விபத்தில் கிரிவல பக்தா் உயிரிழப்பு

சுத்தம், சுகாதாரம் விழிப்புணா்வுப் பேரணி

இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

முதல் கட்ட மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் பிரசாரம் ஓய்ந்தது

SCROLL FOR NEXT