கருங்கல் அருகே உள்ள பண்டாரவிளை பகுதியில் வெள்ளிக்கிழமை இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பண்டாரவிளை இறுப்பறவிளை பகுதியை சோ்ந்தவா் ராஜன் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.