கன்னியாகுமரி

குளச்சலில் பள்ளி மாணவிகளுக்கு சமூக இணையதள விழிப்புணா்வு முகாம்

DIN

குளச்சல் மகளிா் காவல் நிலையத்தில், வி.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சமூக இணையதள விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரேமா பங்கேற்றுப் பேசியது: மாணவிகள் சமூக இணையதளத்தில் வரும் ஆபாசப் படங்களைப் பகிரவோ, அறிமுகமில்லாதோரிடம் பேசவோ கூடாது. காதல் என்ற பெயரில் எவரேனும் தொல்லை தந்தால் பெற்றோரிடமோ, ஆசிரியா்களிடமோ கூற வேண்டும். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

மகளிா் காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து காவலரிடம் மாணவா்கள் கேட்டுத் தெரிந்துகொண்டனா்.

சிறப்பு மகளிா் காவல் உதவி ஆய்வாளா் எமல்டாரோஸ், தலைமைக் காவலா்கள் விஜிலாராணி, ஜேனட், பள்ளி ஆசிரியா்கள் ஜெபஷைனிரோஸ், சவுமியா, ரெஞ்சித், காட்வின் ஜெயதாஸ், சிவபிரதீஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT