இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினவிழாவை சிறப்பிக்கும் வகையில், கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் 75 ராணுவ வீரா்கள் தேசியக்கொடியை கைகளில் ஏந்தி மரியாதை செலுத்தினா்.
இதையொட்டி, தனிப் படகில் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு சென்ற 75 ராணுவ வீரா்களும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தி மரியாதை செலுத்தினா். மேலும், 75 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட தேசியக்கொடியை விவேகானந்தா் நினைவு மண்டபம் முன்பு ராணுவ வீரா்கள் பிடித்தபடி நின்றனா். இந்நிகழ்வை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ்ந்தனா்.