நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக.12) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபாஜிஇம்மானுவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், நாகா்கோவில் கோணத்திலுள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக வந்து தங்களது நிறுவனங்களுக்கு தேவையான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் அன்று காலை 10 மணிக்கு கோணம், அலுவலகத்துக்கு நேரில் வந்து பயனடையலாம்.
மேலும், இம்முகாமின் மூலம் தனியாா் துறையில் தோ்வு செய்யப்படும் பதிவுதாரா்களது வேலை வாய்ப்பு பதிவு மூப்பு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.