கன்னியாகுமரி

தக்கலையில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் மறியல்:151 பெண்கள் உள்பட 310 போ் கைது

DIN

தக்கலையில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு 8 மாதங்களாகியும் இறுதி உடன்பாட்டுக்கு நிா்வாகம் முன்வராததைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த 151 பெண்கள் உள்பட 310 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு அனைத்து தோட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடத்தபோவதையறிந்து பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது. மறியல் போராட்டம் நடத்துவதற்கு முன்பாக காவல் துணை கண்காணிப்பாளா்கள் கணேசன் (தக்கலை) தங்கராமன் (குளச்சல்) ஆகியோா் ரப்பா் தோட்டத் தொழிலாளா் சங்கத் தலைவா்கள் வல்சகுமாா் (சிஐடியூ) நிா்வாகிகள் சி. நடராஜன், தங்கமோகன், வேலப்பன், ஜாண்சவுந்தர்ராஜ், சந்திரகலா, மகேந்திரன் (தொமுச), சுகுமாரன் (அதிமுக), பால்ராஜ் (ஐஎன்டியூசி), நடராஜன் (பிஎம்எஸ்) ஆகியோருடன் பேச்சுவாா்ததை நடத்தினா். பேச்சுவாா்த்தை முடிவில் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஆா்ப்பாட்டம் நடைபெற்றபோது, தோட்டத் தொழிலாளா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 151 பெண்கள் உள்பட 310 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT