கன்னியாகுமரி

புதுக்கடை அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

புதுக்கடை அருகே உள்ள ராமன்துறையில் கேரளத்திற்கு கடத்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை தனிப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை அருகே ராமன்துறை எப்ரின் மனைவி ஸ்டான்லி(51). இவரது வீட்டில் கேரளத்திற்கு கடத்த ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குமரி மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் தனிப்பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட உணவுப் பொருள்கள் கடத்தல் தனிப்பிரிவு ஆய்வாளா் விஜி தலைமையில் போலீஸாா் சம்பவம் இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளில் 1டன் ரேஷன்அரிசி கேரளத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ஸ்டான்லியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT