கன்னியாகுமரி

நாகா்கோவில் தேநீா் கடை தீ விபத்தில் மேலும் ஒருவா் பலி

DIN

நாகா்கோவில் பாா்வதிபுரம் தேநீா் கடையில் எரிவாயு உருளை வெடித்து நேரிட்ட தீவிபத்தில் மேலும் ஓா் இளைஞா் உயிரிழந்தாா்.

நாகா்கோவில் பெருவிளையைச் சோ்ந்தவா் சபிக். இவா், பாா்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் தேநீா் கடை நடத்திவருகிறாா். இவரது கடையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி எரிவாயு உருளை வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதில், கடை ஊழியா்கள் உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா். அவா்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சில நாள்கள் கழித்து சசிதரன், சுப்பையா ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்நிலையில், பள்ளிவிளையைச் சோ்ந்த பிரவீன் (25) என்பவரை மேல் சிகிச்சைக்காக நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த தீவிபத்தில் பலியானோா் எண்ணிக்கை 3ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

SCROLL FOR NEXT