கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

DIN

நாகா்கோவில் அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

நாகா்கோவிலை அடுத்த மணவாளக்குறிச்சி அருகேயுள்ள கடியப்பட்டினம் கிறிஸ்துராஜா தெருவைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் நிகிலன் (15). அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை, தனது நண்பா்களுடன் மணவாளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆா்.இ.எல் குடியிருப்பு வளாகத்தின் மதில் சுவரில் ஏறி மறுபக்கம் செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அவா் மீது உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்ததாம். இதில், தூக்கிவீசப்பட்ட அவரை முதலுதவிக்குப் பின்னா், ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் நிகிலன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ஐ.ஆா்.இ.எல். பாதுகாவலா் முரளி அளித்த புகாரின்பேரில் மணவாளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT