கன்னியாகுமரி

சுசீந்திரம் அருகே எரிந்த நிலையில்இளைஞா் சடலம்: போலீஸாா் விசாரணை

DIN

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த இளைஞா் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

சுசீந்திரம் அருகேயுள்ள ஆசிரமம் பகுதியில், 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிந்த நிலையில் சாலையோரம் கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் சுசீந்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா, ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான போலீஸாா் வந்து விசாரணை நடத்தினா். சடலத்தை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரணை நடைபெறுகிறது.

இந்த இடத்தின் அருகே போலீஸாரின் தற்காலிக சோதனைச்சாவடி உள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

SCROLL FOR NEXT