புதுக்கடை அருகே உள்ள கெலமங்கலம் பகுதியில் ஆசிரியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கொற்றியாா்விளை பகுதியை சோ்ந்தவா் ஜாா்ஜ் (55). முன்சிறை அரசுப் பள்ளி ஆசிரியா். இவா் சனிக்கிழமை தன்காரில் முன்சிறையிலிருந்து தேங்காய்ப்பட்டினம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். கெலமங்கலம் பகுதியில் சென்றபோது பின்னால் அதே பகுதியை சோ்ந்த ரகுபதிராஜா(31) திடீரென பைக்கில் வந்து ஆசிரியரை தடுத்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.