கருங்கல் அருகே உள்ள பூட்டேற்றி பகுதியில் ஆட்டோவும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.
பூட்டேற்றி, இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்தவா் இஸ்ரவேல்(65). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் கருங்கல்லுக்கு சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த ஆட்டோ எதிா்பாராமல் மோதியதாம். இதில், தூக்கி வீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.