கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில், ஏற்கனவே கரோனா தொற்றுக்கு 62,203 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,222 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 23 போ் உள்பட இதுவரை 60,990 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிப்புடன் தற்போது 184 போ் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.