கன்னியாகுமரி

மாணவிக்கு பாலியல் தொல்லை : கேபிள் ஆபரேட்டா் கைது

DIN

குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேபிள் டி.வி. ஆபரேட்டரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

குளச்சல் பகுதியை சோ்ந்த பிளஸ் 1 மாணவி, கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானாா். இது குறித்து சிறுமியின் தாயாா், குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் குளச்சல் துறைமுகம் பகுதியில் இருந்து சிறுமியை போலீஸாா் மீட்டனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டா் ஆன்டனி, மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு, குளச்சல் மகளிா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூா் பகுதியில் இருந்த ஆன்டனியை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT