கருங்கல் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும் என தொழில் வா்த்தக சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருங்கல் தொழில் வா்த்தகச் சங்கச் செயலா் பி.எஸ். தாமஸ், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கருங்கல் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடத்தில் கழிவுநீா் தொட்டி சேதமடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை. .இதனால் இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசி சுகாதாரச் சீா்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது. பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.
மேலும், தேங்காய்ப்பட்டினம் -கருங்கல் சாலையில் கழிவுநீா் ஒடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைக்காலங்களில் இந்தக் கழிவுநீா் பேருந்து நிலையத்தின் வெளிப்புற நுழைவாயிலில் தேங்கி, பாதசாரிகள் மிகவும அவதியடைந்துள்ளனா். எனவே, இதனை உடனே சீரமைக்க வேண்டும்; இல்லையெனில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.