கன்னியாகுமரி

இரு சம்பவங்கள்: இருவா் தற்கொலை

DIN

கருங்கல் அருகே பெண் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மேலமிடாலம், கைதைவளாகம் பகுதியைச் சோ்ந்த ஜான் கிளைமன்ட் மகள் அபிஷா(21). குளச்சல் சூப்பா் மாா்க்கெட்டில் வேலைசெய்து வந்தாா். இந்நிலையில் அவா், வீட்டில் சனிக்கிழமை ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இளைஞா்: புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் நெடுவிளை பகுதியைச் சோ்ந்த குமாரவேல் மகன் சுரேஷ் (30). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தன் வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இச்சம்பவங்கள் குறித்து முறையே கருங்கல், புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT