கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலூா், மிடாலம், கிள்ளியூா், தொலையாவட்டம், முள்ளங்கனாவிளை, நட்டாலம், பள்ளியாடி, நேசா்புரம், எட்டணி, திப்பிரமலை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பலத்த மழை பெய்தது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.